Thursday 1 December 2022

திறந்த மனதோடு பேசுங்கள்.

 திறந்த மனதோடு பேசுங்கள்.

செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி
ஏனெனில் பணத்தைக் கடனாக வாங்கலாம்.
ஆனால்
மகழ்ச்சியை யாரிடமும் கடனாக வாங்க முடியாது.
வாழ்வதற்காக
வாழ்க்கையைத் தொலைப்பது தான் மனிதன் வாழ்க்கை.
வாழ்க்கையில் ஆனந்தம் வேண்டுமென்றால் உன்னை
நேசி
ஆனந்தமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி.
சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல
சம்பாதித்த பணத்தில் ஆனந்தமாக இருப்பதுதான் வாழ்க்கை.
வெற்றிக்கான தொடக்கத்தை
முதலில் உங்கள் மனதிடம் நல்ல நம்பிக்கையில் இருந்து தொடங்குங்கள்.
பிறகு அந்த நம்பிக்கையே வெற்றியை நோக்கிப் பயணிக்க வைக்கும்.
விழிகளைத் திற ஒளி கிடைக்கும்.
எழுந்து நட வழி கிடைக்கும்.
தேடிப்பார் வேண்டியது கிடைக்கும்.
முயற்சி செய் வெற்றி கிடைக்கும்.
பொய்யான அன்பு
பொழுது போக்கான பேச்சு
தேவைப்படும் போது தேடல்.
இதுதான் இன்றைக்கு சிலரது வாழ்க்கை.
நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால்
திறந்த மனதோடு பேசு.
அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது
மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விசயங்களை அமைதியாகச் செய்
வேண்டுமென்றால் மற்றவர்கள் அதைச் சத்தம் போட்டுப் பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால்
யானையை நூலால் கட்டிக்கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உன்னை நீ அறிய வேண்டுமானால்
மற்றவர்களைக் கவனி.
மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.

No comments:

Post a Comment