Friday 23 December 2022

அன்பால் நிறையுங்கள்.

 அன்பால் நிறையுங்கள்.

வீட்டை விட்டு வெளியேறும் போதே கண்ணாடி முன்னால் நின்று ஒரு முறை சிரித்துப் பாருங்கள். உங்கள் முகத்திற்கு விசேஷ மேக்-அப் போட்டது போல், உங்கள் முகத்தைப் பார்க்க உங்களுக்கே மகிழ்ச்சியாகவும்,
பெருமையாகவும் இருக்கும்.
அதே மகிழ்ச்சியும், பெருமையும் அன்று முழுவதும் நிலைக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
சிரிப்பைப் பொறுத்தவரையில் அது மேலோட்டமான முகத்தோடு மட்டும் அல்ல; மனதோடும் தொடர்புடையது. மனதில் அன்பிருந்தால் மட்டுமே நல்ல சிரிப்பு வரும். அதனால் மனதை அன்பால் நிறையுங்கள்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித் தொடர்புள்ளது. இதன் காரணமாக, சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்.
கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும்.
சந்தோஷ அலைகள் நம்மைச் சுற்றி நேர் நிலையான
எண்ணங்களைப் பரப்பும்.
சோக அலைகள் நம்மைச் சுற்றி எதிர்மறையான
எண்ணங்களைப் பரப்பும்.
ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.
சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல் என்பதை உணர்ந்து, சிரித்து வாழ்வோம்.
சிறப்பாக வாழ்வோம்.

No comments:

Post a Comment