Monday 19 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵 எத்தனை கவலைகள் வந்தாலும் ஒவ்வொரு நாளிலும் நினைத்து மகிழ ஏதேனும் சில மகிழ்ச்சியான நினைவுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை அசை போடுங்கள். வாழ்க்கை வளமாகும்.
🏵 புரிந்து கொண்டவர்கள் என்று நாம் நினைப்பவர்களால் தான் நாம் அதிகம் புண்படுகிறோம் மனதளவில்.
🏵 வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல. எல்லோரையும் முந்த வேண்டும் எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று முயலாதே. வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம், ஜன்னலோரத்தில் உட்கார்ந்து இரண்டு பக்கமும் (இன்பம் துன்பம்) வேடிக்கை பார்த்தவாறே என்ஜாய் பண்ணுவோம்.
🏵 ஆள் நடமாட்டம் அற்ற தெருவில் தனக்கு முன் நடந்து செல்லும் பெண்ணை பின் தொடர்வதைப் போல் நடந்தால் அச்சப் படுவார் என்பதை புரிந்து, பின் தங்கி நடந்து வருவதே மனிதாபிமானம்.
🏵 வெற்றிக்குப் பாடு படும் போது அது கிடைத்தே விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் பாடு படா விட்டால் அது கிடைக்கவே கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment