இப்படியும் ஒரு நீதியரசர்..... நேற்று இரவு அறந்தாங்கி உமையாள் ஆச்சி பள்ளி விழாவில் 52 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினேன். நீண்டகாலமாக நானறிந்த பேராற்றல் மிக்க, பொருளாசை இல்லாத வழக்கறிஞர். அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த விழாவில் பாதுகாவலர், காவல்துறை பந்தா, சுழல் விளக்கு வாகனம் என அனைத்தையும் தவிர்த்து மிக எளிமையான முறையில் முன்கூட்டியே வருகை தந்து அனைவரிடமும் பேசிப் பழகியதைப் பார்த்து வியந்து போனேன். குழந்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்து உடனடியாக அவர்களிடம் தானே எழுந்து சென்று பாராட்டிய பண்பைப் பார்த்து நெகிழ்ந்தேன். இந்தியப் பண்பாட்டை ஜி ஆர் எஸ் என்ற ஜி. ஆர். சுவாமி நாதன் நீதியரசர் மீட்டெடுத்துள்ளதை வணங்கி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment