Monday 26 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌗கோப தாபங்களால் அலைக்கழிக்கப் பட்டு, விருப்பு வெறுப்புகளால் பாதிக்கப் பட்டு, வெற்றி தோல்வியை அனுபவித்த பின்னர் கிடைத்ததே பலரின் மன அமைதி.
🌓நவீன உலகில் பலரும், முயற்சி இல்லாமல் வாழ்வில் அதிசயங்கள் நடக்க வேண்டும் என விரும்பும் சராசரி மனிதர்கள் தான்.
🌓தேவையற்ற சிந்தனைகளைச் சுமக்காதே. குழம்பாமல், தெளிவாகச் சிந்திக்கப் பழகு. மனதைக் கட்டுப் பாடுடன் அமைதியாக வைத்துக் கொள்.
🌓சுற்றியுள்ள அனைவரும் சுகமாக இருப்பது போலவும், நீங்கள் மட்டும் போராடிக் கொண்டு இருப்பது போல உள்ள மன நிலையே மன அழுத்தம் வரக் காரணம்.
🌓உங்களது உள் மனப் போராட்டம், ஓயாது தொடர்ந்தால், அது உங்களது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment