Wednesday 28 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ, எவை எல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ, எவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ, அவை அனைத்தும் நமக்குக் கிடைக்க முயற்சி செய்வோம். ஆனந்தத்துடனும் உற்சாகத்துடனும்.
 கற்றுக் கொண்டே இருக்கிறோம் கடைசி வரை வாழ்க்கை பாடத்தை. புரிந்து திருத்திக் கொள்வதில் இருக்கிறது அவரவர் வாழ்வின் வித்யாசம்.
 சில சமயம் நமக்கு திடீரென்று வரும் உடல் நலக் குறைவு மனதையும் ரொம்பவே பாதித்து விட்டு செல்கிறது.
 தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப் படாத மனிதன் எவனோ, அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
 நம் மீதான நல்ல எண்ணங்களை, பிறரிடத்தில் நாம் இழந்த பின், விவாதத்தை ஜெயிப்பதில் மட்டும் என்ன லாபம்?
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment