Thursday 22 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔰எல்லாச் சிந்தனைகளும், எல்லா உணர்ச்சிகளும், எல்லாச் செயல்களும், எல்லா எதிர் பார்ப்புகளும் இறைவன் ஒருவனை நோக்கியே செல்லட்டும், அவன் மீதே ஒரு முனைப் பட்டிருக்கட்டும். அவனே நமது ஒரே துணையும் ஒரே பாதுகாப்பும் ஆவான்.
🔰தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை.
🔰பலர் வாய் விட்டு அழவும் முடியாமல், அழாமல் இருக்கவும் முடியாமல் முழிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனம் எப்போதும் அழுது கொண்டே தான் இருக்கிறது.
🔰அர்த்தமற்ற விஷயங்களை அர்த்தமுள்ளதாக்க முயன்றால் அர்த்தமுள்ள காலமும் அர்த்தமற்றதாகிப் போகும்.
🔰நீங்கள் விரும்பும் இடைஞ்சல்கள் இல்லாத சூழலை அனைவரும் விரும்புவர், எனவே நீங்களும் சக மனிதர்களுக்கு நல்ல சூழ்நிலையை கொடுங்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment