Monday 25 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Saravanaprasad Balasubramanian is with Ravichandran Ra.
ஆ.ராசா தலித் என்பதால்தான் 2G வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். இது பார்ப்பன சதி என ஏழாண்டுகளுக்கு முன்பே கருணாநிதி சொல்லியிருந்தார்.
இப்போது அந்த சதி தகர்ந்திருக்கிறது. ஆ.ராசா அடுத்து தி.மு.கழகத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராவார். அதை யாராவது தடுக்க நினைத்தால் அது திராவிட சதி அல்லவா?
ஒரு தலித் முதலமைச்சராவதை திமுகவில் யாராவது தடுப்பார்களா?
நேற்றுவரை யாரென்றே தெரியாத எடப்பாடி பழனிசாமியெல்லாம் மாற்று கட்சியில் முதலமைச்சராகும்போது ஆரிய சதியை வென்று நெருப்பாற்றில் நீந்தி வந்த தகத்தகாய சூரியன் ஆ.ராசா திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முடியாதா?
அதிமுகவில் அதிகபட்சம் ஒரு அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர் சபாநாயகராகியிருக்கிறார். அதை மிஞ்ச திமுக சார்பில் ஒரு தலித்தை முதலமைச்சராக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சரானால் வடக்கே இருக்கும் ஆரிய பார்ப்பன சக்திகள் மனம் புழுங்கி மருங்குவார்கள் அல்லவா?
புரியாவிட்டால் மீண்டும் முதல் பத்தியை படிக்கவும்.
By Ravichandran Ra

No comments:

Post a Comment