Tuesday 26 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

📳 பணத்தை மட்டுமே தேடுபவர்கள், பிற்காலத்திற்கான வேதனைகளைத் தான் சேமிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் பொழுதே சந்தோசமாக இருக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
📳 பயம் என்பது மாயை. காரண காரியங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் பய உணர்விலிருந்து மீளலாம்.
📳 கடந்து வந்த அவமானங்களை, எந்த வித உணர்ச்சியும் இல்லாமல், நினைவலைகளாக மட்டுமே எண்ண முடிந்தால் நீங்கள் ஒரு மகான்.
📳 உண்மையும், இரக்கமும் கொண்ட, நல்லிதய மனிதர்களின் எண்ணிக்கை, குறைந்து கொண்டு வருகிறது.
📳 பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால், கேட்பதற்கு பொறுமை அவசியம்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment