Thursday 21 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🛐 நம் எல்லோரிடமும் மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் நாம் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.
🛐 வீடுகளில் நடக்கும் ஒத்திகையற்ற நாடகம் பிடிக்காத விருந்தினர்களின் வருகையின் போது நிகழ்கிறது.
🛐 செய்ய விரும்பாத காரியங்களுக்கு மட்டுமே பெயரளவில் அனுமதி எதிர் பார்க்கப் படுகிறது. பிடித்த காரியங்கள் செய்து முடித்த பின்னரே வெளி வருகிறது.
🛐 மன வலிகள் பெரும் பாலும் பிறரால் ஏற்படுவதில்லை. எதிர் பார்ப்புகளால் நாமே உருவாக்கிக் கொள்வது.
🛐 அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையில், உங்களுடைய நல்ல செயல்களை செய்யாமல் விட்டு விடாதீர்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment