Monday 25 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔯 மகிழ்ச்சி என்பது உடல் அளவில் உணர்வது அல்ல, மனதளவில் இருப்பதே உண்மையான மகிழ்ச்சி.
🔯 பிறர் மீது கோபம் வரும் சூழலில் அவர் நிலையில் இருந்து அவர் சார்ந்த நியாயத்தையும் சிறிது நினைவில் கொண்டால் கோபம் தணிந்து விடும்.
🔯 வாழ்க்கையில் எவ்வளவோ நமக்கு கிடைத்தாலும், நாம் கவலைப் பட்டு எண்ணிக் கொண்டிருப்பது, நமக்கு கிடைக்காத சில சாதாரண விஷயங்கள் பற்றி தான்.
🔯 மனதில் தோன்றுவதை எல்லாம் கொட்டி விடும் நாட்கள் போய், மனநிலை சரியில்லை என்று உணர்ந்தால் மௌனிப்பதில் வந்து நிற்பது. மெச்சூரிட்டி.
🔯 வார்த்தைகளை எந்தளவு பார்த்து கையாண்டாலும், அந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவரின் மனப் பக்குவத்தை கையாளத் தெரியாமல் தடுமாற்றம் அடைகிறோம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment