Wednesday 20 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🚺 நாம் பெரிது படுத்தி கோபப்பப் பட்ட விஷயங்கள் எல்லாம் மிக அற்பமான விஷயங்கள் தான் என உணரும் போது, நமது அறியாமை ஓர் குற்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
🚺 ஆடம்பரமாக வாழும் அளவிற்கு இல்லை என்றாலும் வறுமையின்றி வாழும் அளவிற்க்கு நேர்மையான சம்பாத்தியம் நிம்மதி தரும்.
🚺 விட்டுக் கொடுத்து போவது நல்லது தான். ஆனால் உரிமையை விட்டுக் கொடுத்தால் காலப் போக்கில் உறவு விட்டுப் போய் விடும் நிலை கூட வரலாம்.
🚺 தப்பே பண்ணாத நம்மை கோவப்பட வச்சு, டென்சன் ஆக்கி, பண்ணாத தப்புக்காக ஃபீல் பண்ண வச்சு பைத்தியம் ஆக்க சிலரால் மட்டும் தான் முடியும்.
😨 பிடித்ததை விரும்புவதை விட, கிடைத்ததை விரும்புவதே புத்திசாலித் தனமாய் இருக்கும்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment