Saturday 23 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 அன்றே சொன்னார் "சோ'
**********
2G விவகாரத்திலயும்' அன்றே சொன்னார் "சோ'
----2014 துக்ளக் ஆண்டு விழாவில் திரு. சோ பேசியதில் இருந்து.
"2ஜி விவகாரத்திலும் நிச்சயமா குழப்பம் பண்ணுவாங்கனு தான் நான் நினைக்கறேன். என்ன பண்ண முடியும் கோர்ட்டால? கோர்ட் அவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் அவ்வளவுதான். ஒவ்வொரு கண்டனத்தையும் ஒரு நற்சான்றிதழாய் நினைச்சு வாங்கி வச்சுக்கும் காங்கிரஸ்...'
'நிலக்கரி ஊழல், ஆவணங்களைக் காணோம்...'
'ஆதர்ஷ் ஊழல், தஸ்தாவேஜுகளைக் காணோம்...'
' 2G ஊழல் - சாதிக் பாஷாவைக் காணோம்...'
'இந்த சிபிஐ மேல நெறயப் பேருக்கு நம்பிக்கை இருக்கு, எனக்கு இல்ல...'
'நீதிமன்றங்கள்ளாம் காங்கிரஸ்க்குத் தேவையே இல்லை, கபில் சிபல் ஒத்தரே போறும். கோர்ட், கேஸ், விசாரணை எதுவுமே தேவையில்லை, அவரே ஜட்ஜ்மென்ட் குடுத்துடறார்...'
'நிலக்கரி ஊழலா, அப்படி ஒண்ணு நடக்கவே இல்ல. 2Gல ஒரு ரூபா ஊழல் கிடையாது...'
'இந்தச் சிதம்பரம் - அப்படில்லாம் எதுவுமே கிடையாது...'
'தயாநிதி மாறன் விவகாரம். ரெண்டு வருஷமா வழக்கு வரும், விசாரணை வரும்னு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் சார், இவ்வளவு எச்சரிக்கை பண்ணினதுக்கு அப்புறமும் யாராவது சாட்சிகளை கலைக்காம இருப்பாங்களா...'
'படத்துலல்லாம் ஹீரோவ அடிக்க வர்ற வில்லன் நேரா வந்து அடிச்சுர மாட்டான். டாய்ய்ய்னு ஹீரைவப் பாத்துக் கத்துவான். இதக் கேட்டுட்டு ஹீரோ திரும்பி வில்லனப் போட்டு உதைப்பான்...'
'இதான் நடக்கறது, ரெண்டு வருஷமா சிபிஐ 'டாய்ய், டாய்ய்னு கொரல் குடுத்துண்டு இருக்கு...'
'2G விவகாரத்திலயும் நிச்சயமா Mess up பண்ணுவாங்கன்னுதான் நான் நினைக்கறேன். என்ன பண்ண முடியும் கோர்ட்டால? ஒரு ஸ்ட்ரிக்சரப் பாஸ் பண்ணும் அவ்வளவுதான். ஒவ்வொரு ஸ்ட்ரிக்சரயும் ஒரு சர்ட்டிஃபிகேஷனா நினைச்சு வாங்கி வச்சுக்கும் காங்கிரஸ்...'
----2014 துக்ளக் ஆண்டு விழாவில் சோ பேசியதில் இருந்து.
Whatsapp message

No comments:

Post a Comment