Tuesday 19 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 எவரும் தமக்கான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதில்லை, தன் வாரிசுக்கான வாழ்க்கையே விரும்பி வாழ்கிறார்கள். சொத்து, பணம் சேர்ப்பதன் மூலமாக.
 உண்மையை விட பொய்களே உண்மையாக தோற்றமளிக்கிறது. காரணம் அதையே அனைவரும் விரும்புகிறார்கள்.
 என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப் படுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மையல்ல. நீ என்பது நீயே. உன்னை உனக்குப் பிடித்தால் போதும்.
 ஒருத்தர் வீட்டுக்கு போனா, அவங்க வீட்டைப் பற்றி கருத்து சொல்றத என்றைக்கு நிறுத்துறாங்களோ அன்றைக்கு தான் நாடு முன்னேறும்.
 உங்கள் கஷ்டத்திலும் உங்களால் முடிந்த வரை அடுத்தவர் மனதை புன்படுத்தாமல் உதவி செய்யுங்கள் நிச்சயம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கை அழகாய் மாறும்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment