Friday 29 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனைத் தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காண்போம்.
மருத்துவப் பயன்கள் :
👉 பப்பாளிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
👉 பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
👉 தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
👉 அடிக்கடி பப்பாளிப் பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்றுநோய் பரவினாலும், அது இவர்களைத் தாக்காது.
👉 பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
👉 பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்.
👉 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
👉 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச விஷம் இறங்கும்.
👉 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்இ புண்கள் மேல் பூசப் புண்கள் ஆறும்.
👉 அடிவயிற்றுப் பிரச்சனைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
👉 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பு+ச்சிகள் அழிந்து விடும். நன்றி ஏ ஆர் லெட்சுமணன்

No comments:

Post a Comment