Friday 28 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*"நன்றி சொல்வோம்''*
நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம்.
நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது.உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்.நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்.
நன்றி, பாராட்டு உரியவருக்கு கொடுக்கும்போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் நமக்கு திருப்பிக் கொடுப்பார்கள்.
நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.
உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.
அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார்.
மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்:
கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்..
நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.
நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள்.முணு முணுக்காதீர்கள்.
மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.
சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்கு மான சொத்தாக இருக்கும்...

No comments:

Post a Comment