Monday 24 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தொடரும் அநீதி...
திமுக,கூட்டணி எம்பி பாரிவேந்தரின் கல்லூரியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை..ஸ்டாலின்,கனிமொழி மௌனம்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனில்குமாரின் மகள் ஆயிஷா ராணா (19). இவர், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் தூக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இக்கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், விடுதியில் தங்கியிருந்த 4 மாணவ, மாணவிகள் மேல்மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்போது மேலும் ஒரு மாணவி விடுதிக்குள் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இக்கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டனர்.
இவைகள் எல்லாம் தற்கொலைகள்தானா..?என மக்கள் கேட்கின்றனர். எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த கல்லூரி மாணவ,மாணவிகளின் மரணம் மட்டும் தெரியாதது ஏன்..?டெல்லி கல்லூரி மாணவர்களின் காயத்தை விசாரிக்க சென்ற,திமுக மகளீர் அணிதலைவி கனிமொழிக்கும், இளைஞர் அணிதலைவர் உதயநிதிக்கும், எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் மாணவிகளின் தொடர் மரணம் பற்றி கேள்வி கேட்கவோ,போராடவோ முடியாததற்கு காரணம் என்ன?கூட்டணி தர்மமா..?அல்லது அனைத்திலும் கூட்டா..?மாநில,மத்திய அரசுகளும் இவைகளை வேடிக்கை பார்பது ஏன்?புதிய தலைமுறை மற்றும் மீடியாக்கள் இதைப்பற்றியும் விவாதிக்கலாமே..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment