கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
29.10.2019
செவ்வாய் கிழமை
〰〰〰〰〰〰 〰〰
👉🏻இன்று கவிஞர் வாலி பிறந்தநாள்-1931.
செவ்வாய் கிழமை
〰〰〰〰〰〰 〰〰
👉🏻இன்று கவிஞர் வாலி பிறந்தநாள்-1931.
கவிஞர் வாலி அவர்களின் இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்.
தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.
வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
〰〰〰✒✒✒〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதி்ய பாடல் ஒன்று.
🎶
〰〰〰✒✒✒〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதி்ய பாடல் ஒன்று.
🎶
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
படம்: சுமைதாங்கி
〰〰〰〰〰〰〰〰〰
🙏🏻கண்ணன்சேகர்
9894976159.
〰〰〰〰〰〰〰〰〰
🙏🏻கண்ணன்சேகர்
9894976159.
No comments:
Post a Comment