Saturday 19 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌸தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே*
*🌸அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே*
*🌸பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை*
*🌸இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை !*
*༺༻*
பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர்
பணக்காராகிவிடமுடியாது. அதே நேரம்,
பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும்
கிடையாது.
*༺༻*
*சம்பவம்~1*
ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு
செல்கிறாள் புடவை எடுக்க. "எனக்கு
கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள்.
விலை மலிவாக இருக்கட்டும். என்
மகனுக்கு திருமணம். என் வீட்டு
வேலைக்காரிக்கு கொடுக்க வேண்டும்...."
என்கிறாள்.
சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில்
மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து
பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள்.
சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி
வருகிறாள்.
"என் முதலாளியம்மாபையனுக்கு
கல்யாணம். நல்ல சேலையா ஒன்னு
அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும்.
விலை கொஞ்சம் கூட இருந்தாலும்
பரவாயில்லை. நல்ல டிசைன்ஸ் எடுத்துப்
போடுங்க"
*༺༻*
*சம்பவம்~2*
ஒரு பெரிய இடத்துப் பெண், ஒருமுறை
பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில் ஒரு ஸ்டார்
ஹோட்டலில் தங்கியிருந்தாள். அவளது
கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ,
ஹோட்டல் நிர்வாகத்திடம் "குழந்தைக்கு
பால் கிடைக்குமா?" என்றாள்.
"எஸ் மேடம்... கிடைக்கும். ஒரு கப் நூறு
ரூபாய் ஆகும்" என்று பதில் வந்தது.
"பரவாயில்லை .... உடனே ஒரு கப்
வேண்டும்" என்று கூறி ஆர்டர் செய்து
பாலை வரழைத்தாள்.
அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது
வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக
அழ, சாலையோரம் இருந்த ஒரு
டீக்கடையில் காரை நிறுத்தி, பால்
கிடைக்குமா என்று விசாரித்தாள்.
"பசும்பாலே இருக்கும்மா" என்று கூறி
அக்கடைக்கார், பசும்பால் கொடுத்தார்.
"ரொம்ப தேங்க்ஸ்பா ... எவ்ளோ ஆச்சு?"
"பணம் வேண்டாம்மா... குழந்தைங்க
குடிக்கிற பாலுக்கு நான் காசு
வாங்குறதில்லை" என்று பதில்
சொன்னவர், "இன்னும் வேணும்னாலும்
வாங்கிக்கோங்க. போற வழியில குழந்தை
அழுதா என்ன பண்ணுவீங்க?" என்றார்
பரிவுடன்.
*༺༻*
*சம்பவம்~3*
அலுவலகத்துக்கு புறப்படும்போது தான்
அந்த இளைஞன் கவனித்தான். செருப்பு
பிய்ந்துபோயிருந்தது.
பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை
தைக்க செருப்பு தைப்பவரை தேடிச்
சென்றான். ஒரு நபர் சாலையோரம் ஒரு
குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி
அமர்ந்திருந்தார்.
வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு
நிறுத்தி, செருப்பை அவர் முன் போட்டவன்,
"இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க. புது
செருப்பு. எப்படி பிஞ்சதுன்னு தெரியலே.."
"எவ்ளோப்பா ஆகும்?"
செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த
தொழிலாளி, "இருபது ரூபா ஆகும் சார்..."
"இருபது ரூபாயா? பத்து ரூபாய்
வாங்கிக்கோங்க..."
அந்த இளைஞரை சற்று தலையை
நிமிர்த்தி பார்த்தார். கதிரவனின் கதிர்கள்
சுட்டெரித்தது. சரியாக பார்க்க
முடியவில்லை .
"இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார்"
"என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா?
பதினைஞ்சு வாங்கிக்கோங்க"
"நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன்.
சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும்..
அப்போ தான் தையல் நிக்கும்"
இளைஞனின் பேரம்
தொடர்ந்துகொண்டிருந்தது.
இதனிடையே... டீ ஆர்டர் எடுக்க பக்கத்து
டீக்கடை சிறுவன் வந்தான்....
"ஒரு டீ கொண்டு வாப்பா..... சார் டீ
சாப்பிடுறீங்களா??"
அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல்,
"சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ
கொண்டுவாப்பா..." என்றார்.
"இல்லே ஐயா வேண்டாம்..."
"பரவாயில்லை சார்... சாப்பிடுங்க... நல்லா
இருக்கும். இந்த ஏரியாவுல முப்பது
வருஷமா இருக்குற கடை அது..."
சற்று நேரத்தில் சூடான டீ வந்தது.
அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு
பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தப
அந்த டீயை அருந்தினான்.
பசா
செருப்பு தைத்து முடித்த பிறகு, பைசா
கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து
தர, அந்த பெரியவர் சொன்னார்..." செருப்
தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க.... டீக்கு
வேண்டாம்... என்னோட கஸ்டமர் நீங்க...
உங்களை உபசரிக்கிறது என்னோட
கடமை..." என்றார்.
*༺༻*
*🌸பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை. பணத்தை பெரிதாக கருதாத இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம்.*
*🌸தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம். அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது!

No comments:

Post a Comment