Tuesday 29 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌸தன்னைத் தானே கவனிப்பதே "வாழும் கலை"*
*༺༻*
காசி மன்னரின் ரதம் இமயமலை நோக்கி
சென்று கொண்டிருந்தது. வாழ்வை
வெறுத்த அவருக்கு தற்கொலை
எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு
மனிதர் மரத்தடியில் தியானத்தில்
இருந்தார்.
*༺༻*
எளிமையான அவரது முகம்
தாமரை போல மலர்ந்திருந்தது.
காந்தத்தைக் கண்ட இரும்பாக அவரைக்
கண்டதும் ரதத்தை நிறுத்தினார் மன்னர்,
கண்களைத் திறந்த அந்த மனிதர், *'என்ன வேண்டும்?'* எனக் கேட்டார். *“காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன்.* எளிமையாக இருந்தாலும்
உங்களின் பிரகாசமான முகம் என்னை
ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த
நிலையிலும், உங்களிடம் சற்று நேரம்
பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று
விட்டேன்" என்றார் மன்னர்.
*༺༻*
மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த
மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின்
கால்களை நோக்கியிருந்தது.
மன்னருக்குச் சிறுவயது முதல்
கால்களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த
மனிதர் தனது கால்களையே பார்க்கிறார்
என்பதை அறிந்ததும் சட்டென
அசைப்பதை நிறுத்தினார் மன்னர்.
"மன்னா ! எவ்வளவு காலமாக இந்த
பழக்கம் உள்ளது?" எனக் கேட்டார் அவர்.
"நினைவு தெரிந்த நாள் முதல்...." என்றார்.
" இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று
கேட்டார் அவர்.
" நீங்கள் என் கால்களையே உற்று
கவனித்தீர்கள்" என்றார்.
*"பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறார். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய்.*
*༺༻*
உலகத்தைப் பற்றி கவலைப்படாதே.
உன் கால்களை நான் கவனித்ததால்,
நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி
விட்டேன் என்கிறாய். இனி *"உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்"*
என்றார்.
மன்னரின் மனதில் ஒளிக்கீற்று
படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?"
என்று கேட்டார்.
*"புத்தர்”* என்றார் அந்த மனிதர்.
காலில் விழுந்து வணங்கினார்.
*தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை* என்பதை அறிந்ததும், மன்னரின்
ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது.

No comments:

Post a Comment