Friday 25 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடவுளின் வேலை தான் என்ன*
ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது:
''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''பிறந்து கொள்''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது:
''நான் வளர வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''வளர்ந்து கொள்''
வளர்ந்த குழந்தை கேட்டது:
''நான் படிக்க வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''படித்துக் கொள்''
படித்த பையன் கேட்டான்:
''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
🌀கடவுள் சொன்னார்:
''தேடிக் கண்டுபிடி''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்:
''எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''நல்ல பெண்ணாய்ப் பார்த்துத் திருமணம் செய்துகொள்''
திருமணம் ஆனதும் கேட்டான்:
''நல்ல குழந்தை வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''பெற்றுக் கொள்''
வயதானபின் அவன் கேட்டான்:
''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே''
🌀கடவுள் சொன்னார்:
''இறந்து கொள்''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்:
''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய். அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
🌀கடவுள் புன்னகையுடன் சொன்னார்:
*''இத்தனை நிகழ்வுகளிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இருக்கிறதே, அதுதான் நான்''*

No comments:

Post a Comment