Monday 11 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நண்பரின் பதிவு
வேலூர் CMC .செய்வது அயோக்கிய தனம் ..இதில் நீட் புரட்சியாம்......
வேலூர் CMC யில் மருத்துவப் படிப்பு அனுமதி நிறுத்தம் !
என் சொந்த ஊர் வேலூர். பிறந்தது CMC யில், வளர்ந்தது, படித்தது எல்லாம் வேலூர் தான். என் நண்பர்கள் பலர் CMC யில் படித்திருக்கிறார்கள், வேலை செய்திருக்கிறார்கள். என் தங்கை அங்கு 3 வருடம் வேலை செய்திருக்கிறார்.
CMC மருத்துவமனையைப் பொருத்த வரை, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை, ஓரளவுக்கு குறைந்த கட்டணம். இதை நான் நேரடியாக பார்த்தும் இருக்கிறேன். நிற்க.
ஆனால், Christian Medical College(CMC) இல் MBBS சேர்க்கை என்பது மிகவும் ரகசியமான ஒன்று. மாநில பாடத்திட்ட மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது, சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கீடு அறவே கிடையாது, தமிழக மாணவர்கள் 10%க்கும் குறைவாகவே இருப்பர்...
பெரும்பாலும் மலையாள கிறித்துவர்கள் தான் அனைத்து மட்டத்திலும் இருப்பர். கிறித்துவ சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அங்கு சேர முடியும். அதுவும் Church Sponsorship அதாவது CSI diocese, கேரளா Diocese, பிஷப் சிபாரிசு, Staff Dependents அடிப்படையில் மட்டுமே MBBS படிப்புக்கு அனுமதி. அதற்கு ஒப்புக்குச் சப்பானுக்கு ஒரு நுழைவுத் தேர்வு. யார் MBBS சேர போகிறார்கள் என்பது தேர்வு எழுதுவதற்கு முன்பே நிர்வாகத்தினர் முடிவு செய்கின்றனர். ஆக, இது கிட்ட தட்ட Match Fixing மாதிரி MBBS seat fixing. இது வேலூரில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு படிப்பதற்கும் வேலைக்கு சேர்ந்து சலுகைகள் பெறவும் கிறித்துவ மதத்திற்கு மாறுபவர்கள் ஏராளம்.
அங்கு MBBS முடித்தவர்கள் 2 ஆண்டுகள் மிக சொற்பமான ஊதியத்திற்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டும். அனைத்து படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இதே நிலை தான்.
இத்தனை வருடம் இப்படிப்பட்ட அட்மிஷன் மோசடியை எந்த அரசாங்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது புரியாத புதிர் !
ஆக அவர்கள் நீட்டிற்கு எதிராக குதித்திருப்பதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.
ஒன்று அவர்களை நீட்டிற்கு வரவழையுங்கள்...இல்லையென்றால் AIIMS மருத்துவமனையாக மாற்றிடுங்கள் ....

No comments:

Post a Comment