Wednesday 13 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு - கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி*
- பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
- ACS மெடிக்கலில் 146.
- மீனாக்‌ஷி மெடிக்கலில் 130.
- செட்டிநாடு மெடிக்கலில் 127.
- SRM மெடிக்கலில் 98.
- ராமச்சந்திரா மெடிக்கலில் 76.
- சவீதா டெண்டல் 77.
எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு.
டீம்டு (Deemed) மருத்துவ பல்கலை கழகங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும்.
ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 850 இடங்களுக்கு குறைந்தது ரூ 42,500 லட்சம் (42 கோடி). இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கல்வி கட்டணம். அது இன்னொரு 42,500 லட்சம். எல்லாம் போச்ச்ச்ச்ச்!
இப்படி இருக்கைகள் நிரப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தைக்கூட ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்?
இதற்கும் மேலாக, *+2 கல்வி வியாபாரத்தை நம்பி இருக்கும் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி போன்ற மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகள் பெறும் வருமானம்!*
சில பள்ளிகளில் ஓராண்டில் 1000திற்கும் மேலான மாணவர்கள் +2 தேர்வு எழுதுகிறார்கள். +2 கல்வி கட்டணம் 3 லட்சம். அப்படி என்றால் *ஒரே ஒரு பள்ளியின் ஆண்டு வருமானம் 3000 லட்சம்(அதாவது 30 கோடி).*தமிழகத்தில் மொத்தம் 5000திற்கு மேற்ப்பட்ட பள்ளிகள். அப்படி என்றால் இதைப்போல கல்வியை வியாபாரமாக்கும் எவ்வளவு ஆயிரம் பள்ளிகள் உள்ளன? இதுப்போன்ற பள்ளிகளில் எவ்வளவு கோடி வியாபாரம் நடக்கிறது ஓராண்டில்?
இவ்வளவு பணத்தையும் கல்வி மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்?
*அனிதா பயின்றது ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், Hostelலில் இருந்துதான் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.*
இன்னும் எத்தனை ஏமாந்த மாணவர்களின் உயிரை பறிக்குமோ இந்த கும்பல்?
ஏழையானாலும், புத்திசாலி மாணவர்கள்
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலுமே 'நீட்' தேர்வுண்டு.
தமிழ்நாட்டில் மட்டும், அரசியல் எதிர்கட்சியினர், சினிமாகாரர்களும் தங்கள் சுயநலத்திற்காக மக்களையும், மாணவர்களையும் தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.
*அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 'பினாமி' பள்ளிகளில் 'நீட்' தேர்வு அமலாக்கத்தால் எவ்வளவு கோடிகள் நஷ்டமோ?*
மக்களாகிய நாம் எதையுமே, எப்பொழுதுமே ஆற அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி, எதற்கெடுத்தாலும் எதிர்க்க கூடாது.
🙄🤔🤔

No comments:

Post a Comment