Tuesday 27 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் என்ன பேசினால் என்ன...
யாரும் கூறுவதை எல்லாம் அப்படியே காதில் வாங்கி கொள்வது நல்லதல்ல அது புழ்ச்சியோ... கெடுதலோ..வேறு விமர்சனங்களோ.. எதவாகினும்...இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
நமது உறவுகளும் சுற்றமும்.. நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நாம் பிறரின் தவறுகளை நம் மனதிலிருந்து அப்போதைக்கப்போதே அழித்துவிடத்தான் வேண்டும்....
தவறுக்காக நம் உறவுகளையோ சுற்றங்களையோ நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடவேண்டாமே.
நாம் ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணவேண்டாமே.சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாள்வது நலம்..என்றும் நன்மை தரும்..
விமர்சனங்கள் பலவகையானது... நம்மிடம் ஒருவேளை உணவருந்தியவன் ஒருவிதமாக நம்மைபற்றி கூறிவிட்டுபோனால்.. நம்மிடம் எதையோ எதிர்பார்த்து வந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்தவன் வேறுவிதமாக கூறுவான்..
நம் அருகிலிருப்பவன் ஒருவாறு கூறினால்... இரண்டு தெரு தள்ளி இருப்பவன் வேறுமாதிரி கூறுவான்...
ஒரு புதிய உறவை தேடிபோகுபவர்கள்கூட.. நான்கு பேரிடம் விசாரித்தாலும்... தானே ஒரு மதிப்பீடும் செய்தபின்னரே முடிவெடுக்கின்றனர்...
பலவிதமான விஷயங்கள் விமர்சனங்கள் நம்மைபற்றி நம் காதில் வந்து விழும்போதெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளானால் வாழ்வில் நிம்மதி எட்டாகனவாகிவிடும்....
யார் என்ன பேசினால் என்ன... நாம் போகும் பாதையில் கவனமோடு.. அடிவைத்து முன்னேறிகொண்டே இருப்போம்..
அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்..
செல்வி அருள்மொழி...மனநல ஆலோசகர்

No comments:

Post a Comment