Tuesday 20 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக்கு!!!!!*
*சுகம்!!!!!*
*அழுவதுக் கூடச் சுகம் தான்*
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...
*காத்திருப்பது கூடச் சுகம் தான்*
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..
*பிரிவு கூடச் சுகம் தான்*
பிருந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்..
*சண்டைக் கூடச் சுகம் தான்*
சட்டென முடிக்கு கொண்டு வரும்
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..
*பொய்கள் கூடச் சுகம் தான் ** கேட்பவர்
முகத்தில் புன்னகையை மட்டும்
வரவழைத்தால்..
*ஆத்திரம் கூடச் சுகம் தான்* உரிமையையும்
அக்கறையையும் மட்டும்
வெளிப் படுத்தினால்..
*விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்*
விவாதத்தை விட உயர்ந்தது உறவு
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..
*துன்பம் கூடச் சுகம் தான்*
உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..
*தோல்விக் கூடச் சுகம் தான்*
முயற்சியின் தீவிரத்தை இன்னும்
அதிகப் படுத்தினால்..
*தவறுக் கூடச் சுகம் தான்*
தவறாமல் தவறிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டால்..
*மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்*
*எதிர்மறையில் இருக்கும்* *நேர்மறையைத்*
*தேடித் தெரிந்து* *நம்மைத் தேற்றிக் கொண்டால்...*
*வாழ்க வளமுடன் நலமாக 🌹 நட்பூக்களே*🌹

No comments:

Post a Comment