Friday 30 November 2018

உலகத் தரத்தில் 2.0

உலகத் தரத்தில் 2.0
ஷங்கர் ரஜினியின் இந்தப் படம் நேற்று இரவுக் காட்சி 3 டி கண்ணாடி அணிந்து திருநகர் மணி இம்பாலா மேஜிக் திரையரங்கில் பார்த்தேன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு.
படம் அருமை, காட்சி அமைப்பு மேல்நாட்டுப் படங்களுக்கு சவாலாக உள்ளது. கதை புதிய வகையில் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் செல் போன் பயன்பாடு, செல் போன் டவர்களினால் வரும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.
பாடல்கள் மறைந்த பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி காட்சிக்கு ஏற்ப சிறப்பாக உள்ளது.
விஞ்ஞானம் தொழில்நுட்பம் பெரும் பொருட் செலவு, நீண்டகால தயாரிப்பு. ஆனால் பிரம்மாண்டம்.
ரஜினிக்கு மீண்டும் மிகப்பெரிய சிறப்புதான், ஷங்கரின் பேராற்றல் நிச்சயம் பாராட்டுக்குரியது.-மனிதத்தேனீ

No comments:

Post a Comment