Wednesday 28 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக்கு*
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது
அவன் உடனே கடற்கரையில்,
*“இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”* என எழுதிவிட்டான்
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார்
அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின
அவர் அக்கடற் கரையில்,
*“இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!”*
என எழுதிவிட்டார்
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான்
மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய்
*இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!”*
என கரையில் எழுதினாள்
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று
முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார்
அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில்,
*“இந்தக் கடல் ஒன்றே போதும் நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!”* என எழுதினார்
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது
*பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே*
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால்
நீ *பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு*
தவறுக்காக *உன்* *நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே*
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால்
அதை விடவும் பலமாக அதற்கு *பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே*
சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு .......💪
வாழ்வில் *நமது தேவை குறித்த தெளிவான தேர்வும்,*
*அதை நோக்கிய* *நேர்மையான தேடலும்* இருந்துவிட்டால்,
*வெற்றி கூடிவரும்.. அமைதி தேடிவரும்..*
*நல்விடியல் வந்தனம்*

No comments:

Post a Comment