Thursday 22 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

களத்தில் சமூக அக்கறை......
கஜா_புயல்_மீட்புபணி தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி அங்கு முன்பே இருந்த இன்வர்ட்டரில் இணைத்தோம். தற்போது மேகமூட்டமாக இருந்தாலும் சார்ஜ் ஏற ஆரம்பித்து விட்டது. இனி இங்குள்ள 5 குடும்பங்களுக்கு இரவு என்பது இனிதாக இருக்கும்.
காரணம் இங்கு அக்கம்பக்கத்தில் புயலால் வீடு இழந்தவர்கள் இந்த வீட்டில் தான் தங்குகின்றார்கள். மின்விசிறியும் இயங்கும் என்பதால் குழந்தைகள் கொசுக்கடியில் இருந்து இனி தப்பிக்கும் 🙂
மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் இது போல் புத்திசாலித்தனமாக செயல் பட்டு நமது உறவுகளை கஜா புயலின் பாதிப்பிலிருந்து மீட்கவும். ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் 98424-96391 அழைக்கவும். எனக்கு 2004 சுனாமிக்கு முன்னரே பல பேரிடர்களை களம் கண்ட அனுபவம் உண்டு. தற்போது திருச்சியில் விமானநிலையம் அருகே வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகை மாவட்டத்தின் நாகூர் தான்.
/நேற்று கண்ணீர் விட்ட Muhammad Ismail H இன்று மீண்டும் களத்தில்
நன்றி டி ஜி ராமமூர்த்தி

No comments:

Post a Comment