Monday 26 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*இன்றைய சிந்தனைக்கு:*
*விஷம்:* நம் தேவைக்கு மேல் அதிகமாக இருக்கும் அனைத்துமே விஷம் தான். அது அதிகாரமாக, சொத்தாக, பேராசையாக, ஓய்வாக, அன்பாக, குறிக்கோளாக, வெறுப்பாக அல்லது எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால் விஷம் இல்லை.
*பயம்:* நிச்சயமில்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாத நிலையில் பயம் ஏற்படுகிறது. ஏற்றுக்கொள்ளும் போது சாதனையாக கருதப்படுகிறது.
*பொறாமை:* மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், பொறாமை ஏற்படுகிறது. ஏற்றுக் கொள்ளும் நிலையில் உத்வேகம் தோன்றுகிறது.
*கோபம்:* நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளும் போது பிறப்பது கோபம், ஏற்றுக் கொள்ளும் போது சகிப்புத் தன்மை தோன்றுகிறது.
*வெறுப்பு:* ஒரு மனிதனை அவனிருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளும் போது வெறுப்பு ஏற்படுகிறது. எந்த விதக் கட்டாயங்களும் இல்லாமல், அம்மனிதனை ஏற்றுக் கொள்ளும் போது நேசம் ஏற்படுகிறது.
*சிந்தித்து செயலாற்றுங்கள்!!!!!*

No comments:

Post a Comment