Wednesday 25 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌐யாரையும் நாம் சார்ந்து இருக்கும் போது தான் நமக்கான தோல்வியும், மன உளைச்சலும் வருகிறது. தனித்திரு வெற்றி நிச்சயம்.
🌐மரியாதை எல்லாம் மனதில் இருந்தால் போதும் என்பார்கள். நாம் மனதளவில் செலுத்தும் மரியாதையே உயர்வானது. ஒருவர் அருகில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கான மரியாதையை மனதளவில் உணர்தலே சிறந்தது.
🌐தனிமைகள் கிடைப்பது உன்னை நீ தெரிந்து கொள்ள. தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக் கொள்ள. முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றி கொள்ள. எதிரிகள் கிடைப்பது உன்னை நீ வளர்த்துக் கொள்ள.
🌐நாம் ஆசைப் பட்டது வாழ்க்கையில் கிடைக்காவிடில், கிடைப்பதை வைத்து சுகப்படு, சுகப் படாவிட்ட்லும் வெறுப்புறாதே. வெறுப்புற்றால் அதையும் இழக்க வேண்டிய நிலை வந்து விடும்.
🌐புண்ணியம் தேடி அலைவதை விட பாவச் செயல்களை குறைத்துக் கொள்வதே பெரிய புண்ணியம்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment