Saturday 19 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் .
"என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.
ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"
அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,
எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .
ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,
நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..
ஆனால்..
இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்
'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .
இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".
பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!!
( படித்ததில் வலித்தது) i love my amma l.gk

No comments:

Post a Comment