Thursday 18 July 2019

கவியரசரும் காவியக் கவிஞரும்....












கவியரசரும் காவியக் கவிஞரும்....
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா.. மறக்க முடியாத வாலி!
காலம் நமக்கு வழங்கிய அற்புதக் கவிஞர் வாலி. 50 வருடங்கள் கடந்தும் மறக்க முடியாத, தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் வார்த்தைகளை இட்டு நிரப்பி பாடல்களை வழங்கிய கவிஞர் வாலி.
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை கேட்டு மெய்மறந்த வாலி, ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு தபால் அட்டையில் தன் சிலிர்ப்பினை எழுதி டிஎம்எஸ்-சுக்கு அனுப்பி வைக்க... பின்னர் அதன்மூலம் இருவருக்கும் பழக்கம் அதிகரிக்க.. கால சூழ்நிலையில் திரையுலகிற்கே வாலியை அறிமுகம் செய்து வைத்தார் டிஎம்எஸ். இன்னும் சொல்லப்போனால், ஊரெல்லாம் கண்ணதாசன் பாடல்கள் ஓங்கி ஒலித்து கொண்டிருந்த நேரத்தில்தான் வாலியின் வருகை நிகழ்ந்தது. "பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா' என்ற பாடல் இவருக்கு முகவரி கொடுத்தது.
கற்பகம் - அங்கீகாரம்
சவாலின் வெளிப்பாடு
சவாலின் வெளிப்பாடு
1963-ல் கே.ஆர்.விஜயாவை "கற்பகம்" படம் மூலம் அறிமுகம் செய்கிறார் படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஆனால் கண்ணதாசன் அப்போது அரசியலில் படு பிசி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருப்பார். அதனால் நேரமின்மை காரணத்தினால் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் வந்து ஐக்கியமானது வாலிக்கு கூடுதல் பெருமை.. சவாலின் வெளிப்பாடு... அதிர்ஷ்டத்தின் உச்சம்.. படத்தில் 4 பாடல்கள். நான்குமே சுசிலா பாடியது. ஒரு ஆண் குரலும் கிடையாது. இது திட்டமிட்ட காரணம் ஏதும் இல்லை. பி.சுசிலாவின் தேன்குரலில் பாடல்கள் தமிழகத்தையே ரீங்காரமிட்டது. 'அத்தைமடி மெத்தையடி' அனைரையும் நித்திரை கொள்ள வைத்தது. படம் சக்க போடு போட்டது. படக்குழுவினர் 100-வது நாள் விழா எடுக்கிறார்கள்.
கவியரசரிடமிருந்து வந்த பாராட்டு
புன்னகையுடன் வந்த கண்ணதாசன்
புன்னகையுடன் வந்த கண்ணதாசன்
அந்தவிழாவுக்கு கண்ணதாசனை அழைக்கிறார்கள். தான் ஒரு பாடுலும் எழுதாத விழாவுக்கு அழைக்கிறார்களே, இன்னொருவர் எழுதியதை பாராட்ட கூப்பிடுகிறார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சிரித்தபடியே மேடையில் ஏறி அமர்கிறார் கவியரசர் கண்ணதாசன். விழா தொடங்கியது. ஒருவர் பேச ஆரம்பிக்கிறார், "பந்தயம் நடைபெறும்போது பல ரேக்ளா ரேஸ்களில், ஒன்றுக்கும் ஆகாத சில உதவாத, சோப்ளாங்கி மாடுகள் அது இஷ்டத்துக்கு ஓடிவந்து முன்னால் வந்துநின்றுவிடும். அப்படித்தான், இந்த படத்திலும் பாட்டுக்கள் எப்படியோ பிரபலமாகிவிட்டது" என்றார். இதைக் கேட்டதும், அதிர்ச்சியிடைந்த கண்ணதாசன், உடனே பேச துவங்கினார் "நண்பர் பாடல்கள் குறித்து தவறாக பேசிவிட்டார். அந்த பாடல்களையெல்லாம் நானும்தான் கேட்டேன். குறிப்பாக அத்தையடி மெத்தையடி பாடலை இப்போதுகூட காரில் வரும்போது கேட்டு கொண்டுதான் வந்தேன். பாடலாசிரியர் நன்றாக எழுதியுள்ளார். ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது. அதேபோல "பக்கத்துவீட்டு பருவமச்சான்" என்ற ஒரு பாடலில், 'பார்வையிலே வடம் புடிச்சான்' என்ற வரி வரும். இது சாதாரண வரிகிடையாது. ஒரு மிகச்சிறந்த கவிஞனால்தான் எழுத முடியும் என்றார். அவ்வளவுதான்... மேடையில் உட்கார்ந்திருந்த வாலிக்கு கண்கள் பனித்தன. முதல் பாராட்டு. முதல் அங்கீகாரம். கவியரசரிடமிருந்து கவிஞருக்கு கிடைத்த முதல் வரவேற்பு இது.
நன்றி ராதா நாராயணன்

No comments:

Post a Comment