Monday 31 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴
🔮உன்னைப் பத்தி நல்லா புரிந்து வைத்திருப்பவர்களிடமும், தெரிந்து வைத்து இருப்பவர்களிடமும் புதுசா உன்னைப் பத்தி சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யாதே.
🔮நமது திறமைக்கான ஊதியம் கிடைக்கவில்லை என அழுவதை விட நமது திறமைக்கு ஒரு வேலை கிடைத்ததே என சந்தோசப் பட வேண்டும்.
🔮படிக்காதவர்கள் பிறருக்குத் தருகிற மரியாதை அதிகம். ஆனால் படித்தவர்களில் சிலர் யாருக்குமே மரியாதை தருவது இல்லை என்பது வருத்தம்.
🔮எல்லோர் இடமும் "நீ செய்வது நன்று" என்ற வார்த்தையை நாம் எதிர் பார்ப்பது இல்லை. நமது எதிர் பார்ப்பு எல்லாம் நமக்குப் பிடித்தவர்களிடம் இருந்து மட்டும் தான்.
🔮பிடிக்காதவர்களைப் பழி வாங்கினால் சாதாரண மனிதர் தான். பிடிக்காதவர்களை அலட்சியம் செய்தால் உயர்ந்த மனிதர் ஆவோம்.
🔮பணிந்து பேசுவது பயத்தினால் அல்ல மற்றவர் மீது உள்ள மரியாதையால். துணிந்து பேசுவது அலட்சியத்தால் அல்ல மற்றவர் மீது உள்ள அக்கறையால்.
🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴🇩🇴
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment