Monday 31 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?
கண்ணபிரானும், அர்ஜுனனும் கால்நடையாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை பார்த்து அது புறா தானே அர்ஜூனா என்றார் கண்ணன்.
அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.
ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.
மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...
என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.
என்னடா நீ!
நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!
அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்றகண்ணனிடம்
கண்ணா!
என்பார்வையை விட உன்வார்த்தையில்எனக்கு நம்பிக்கைஅதிகம்.
மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்!
நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...!
உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.அர்ஜூனன்
பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! என்று புராணங்களே கூறுகையில்
நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால்....
மனிதனானவன் பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க இயலாது....
இறைவனின் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே முதல் படி

No comments:

Post a Comment