Monday 31 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚶ஒரு நல்ல கருத்தை சொல்வது சிறப்பு. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்கும் திறனே அதற்கான பலன் தரும்.
⚶தன் மேல் உள்ள நம்பிக்கையை விட பணத்தின் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாக, அதிகமாக எதையும் துணிந்து செய்யலாம் என்ற நம்பிக்கையை பணம் பலருக்கு தருகிறது.
⚶ஒரு போதும் தற்புகழ்ச்சி கொள்ள வேண்டாம். அதனால் மனதின் பேராற்றல் சிறிது சிறிதாக வீணாகி விடும்.
⚶காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
⚶கண்ணாடியைப் போலவே ஜாக்ரதையாக உறவுகளைப் பேண வேண்டும். உடைந்த பின் ஒட்டினாலும் கண்ணாடி முன்பு போல் இருக்காது. இதே தான் வாழ்க்கை நடைமுறையும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment