Friday 21 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*கோடீஸ்வரரின் ரகசியம்...*
அமெரிக்காவின் பிரபலமான கோடீஸ்வரர் ஒருவரை ஒரு குழு சந்தித்து கல்விக்கூடம் கட்ட நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்தது.
பேசிக்கொண்டே இருந்த பணக்காரர் பாதியில் எழுந்து போய் விளக்குகள் அநாவசியமாக எரிகின்றன நிறுத்திவிட்டு வருகிறேன் என்று அணைத்துவிட்டு வந்தார். இதைப் பார்த்ததும் நன்கொடை கேட்க வந்தவர்களுக்கு இவர் கஞ்சன் போல இருக்குதே என்ற சந்தேகம்.
கோடீஸ்வரர் நாலைந்து குறுக்குக் கேள்விகளைக் கேட்டார். முடிவில் மூன்று லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை செக் எழுதி அவர் தந்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
ஒருவர் "ஒரு விளக்கு எரிவதைகூட செலவாக நினைக்கும் குணம் உடைய தாங்கள் எப்படி இவ்வளவு நன்கொடை தர முன் வந்தீர்கள் " என்றார். "இப்படி சேமித்து மிச்சம் வைத்ததால்தான் என்னால் நல்ல காரியங்களுக்கு உதவ முடிகிறது என்றார்.
சிக்கனம் தேவை இக்கணம் ..
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

No comments:

Post a Comment