Monday 31 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குறை கூற பலர் இருந்தாலும், நம்பிக்கையூட்ட சிலர் இருப்பதால் தான் வாழ்க்கையில் பலர் முன்னேற முடிகிறது.
நாம் செல்லும் பாதை நேர் வழியாக இருந்தால் துஷ்டர்கள் குறுக்கீடு இருக்காது. காரணம் துஷ்டர்கள் குறுக்கு வழியில் தான் செல்வர்.
புத்தகங்களை இழந்து விட்டு அறிவைத் தேடுகிறோம். உறவுகளை இழந்து விட்டு அன்பை தேடுகிறோம். நம்மை நாமே இழந்து விட்டு நிம்மதியை தேடுகிறோம். இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாததை தேடுவதையே வாழ்க்கை என வாழ்கிறோம்.
யாருக்கும் யாரும் சொந்தமில்லை. நட்பின் மேல் நம்பிக்கை இல்லை. தேவைகள் ஓய்ந்தாலே புரிதல். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நாம் செல்லும் பாதை. சரியென்ன தவறென்ன, எவருக்கு எது வேண்டும் செய்வோம்.
விட்டுக் கொடுத்து, மற்றவர்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கை தான், தன்னையும் வாழ வைக்கும், பிறரையும் வாழ வைக்கும். Adjusting and living a life for others, will allow you to live alongwith others to live.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment