☮குறை கூற பலர் இருந்தாலும், நம்பிக்கையூட்ட சிலர் இருப்பதால் தான் வாழ்க்கையில் பலர் முன்னேற முடிகிறது.
☮நாம் செல்லும் பாதை நேர் வழியாக இருந்தால் துஷ்டர்கள் குறுக்கீடு இருக்காது. காரணம் துஷ்டர்கள் குறுக்கு வழியில் தான் செல்வர்.
☮புத்தகங்களை இழந்து விட்டு அறிவைத் தேடுகிறோம். உறவுகளை இழந்து விட்டு அன்பை தேடுகிறோம். நம்மை நாமே இழந்து விட்டு நிம்மதியை தேடுகிறோம். இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாததை தேடுவதையே வாழ்க்கை என வாழ்கிறோம்.
☮யாருக்கும் யாரும் சொந்தமில்லை. நட்பின் மேல் நம்பிக்கை இல்லை. தேவைகள் ஓய்ந்தாலே புரிதல். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நாம் செல்லும் பாதை. சரியென்ன தவறென்ன, எவருக்கு எது வேண்டும் செய்வோம்.
☮விட்டுக் கொடுத்து, மற்றவர்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கை தான், தன்னையும் வாழ வைக்கும், பிறரையும் வாழ வைக்கும். Adjusting and living a life for others, will allow you to live alongwith others to live.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே
எல்லாம் நன்மைக்கே
No comments:
Post a Comment