Thursday 18 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர்களை நம்பித்தான் தமிழ்தேசியமா?
மதுரையில் தேவரின் வெண்கல சிலையை திறக்க இந்திய ஜனாதிபதி வி.வி.கிரியை அழைத்தார்கள் சில நாட்களில் ஜனாதிபதிபதிக்கு தேவரை சாதி வெறியராக சித்தரித்து ஒருவர் கடிதம் எழுதினார்
அதை படித்த ஜனாதிபதி பத்திரப்படுத்திக் கொண்டார்.
பின்பு சிலையை திறந்து வைத்து ஜனாதிபதி வி.வி.கிரி பேசினார். "விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் நான் "டாமோ" ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். எங்கள் சிறைக்கு முன்னால் பீரங்கி இருக்கும் நாங்கள் யாரும் அந்த குறிப்பிட்ட சிறையிலிருந்து தப்பிக்க நினைத்தால் பீரங்கி வெடிக்கும் எல்லோரும் இறக்க நேரிடும்.
இப்படிபட்ட கொடூரமான சிறையில் இருந்தபோதுதான் நான் தமிழ் மொழியை கற்றேன். திருக்குறளை மனனம் செய்தேன், தியானம் பயின்றேன், இந்திய சோசலிசத்தை புரிந்துக்கொண்டேன். இதை எனக்கு சொல்லிதந்தவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.
அவரும் விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக 5 வருட கடும்தண்டனை பெற்று அந்த சிறையிலிருந்தார், இந்த விவரம் தெரியாதவர்கள் தேவரை சாதிவெறியர் என்று எனக்கே கடிதம் எழுதுகிறார்கள்" என்று கூறி வருத்தப்பட்டார்.
அந்த கடிதத்தை எழுதியவர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தீவிர தலைவரும்,ஒரு சாதி சங்கத்தில் பொறுப்பிலுமிருந்தவர், இன்றைய தமிழ் தேசியம் பேசும் பழ.
நன்றி தி௫ லெட்சுமணன்

No comments:

Post a Comment