Tuesday 16 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரையில் உள்ள பிரபல தோல் மருத்துவரை ஒருவருக்காக பார்க்க சென்றேன் முன் பதிவு வேண்டும் என்று அவரின் உதவியாளர் மிக கறாராக கூறினார் பிறகு அவசரம் என்றதற்கு முன் பதிவு செய்தவர்கள் யாராவது வராவிட்டால் பார்க்கலாம் என்று கூறினார்.
என்னடா இது இவ்வளவு ஸ்டிரிக்டா இருக்காய்ங்க என்று பொறுமையாக இருந்தோம்.
நல்ல வேளை பதிவு செய்தவர்கள் வரவில்லை எங்களை அனுமதித்தனர்.
உள்ளே டாக்டர்....அதைவிட கறாராக பேசினார் இடையில் நாங்கள் எதாவது சொன்னால் ஏன் பேசன்ட் பேசமாட்டாரா...கடுமை காட்டினார்....
வியாதியை பரிசோதித்தார்....ஒன்னுமில்லை சும்மா பங்கஸ் தான் துணிகளை நன்கு வாஸ் செய்து அணியுங்கள். ..என்று கூறி பிரிஸ்கிரிப்ஸன் எழுதி அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறினார்.
உடனே அவரே சரி ஓகே பீஸ் கொடுங்கள் என்றார் நான் சில நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணினேன். ...
தயங்கியபடி எவ்வளவு சார் என்றேன்..
அவர் முப்பது ரூபாய் என்றார்....
நான் சந்தேகத்தோடு மீண்டும் எவ்வளவு சார் என்றேன்...அவர் சற்று உரத்த குரலில் முப்பது என்றார். ..
மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை கொடுத்து விட்டு வந்தேன்.
வெளியே வந்த எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை...
இத்தனைக்கும் இவர் தென் மாவட்டங்களில் மிக பிரபல மருத்துவர்.
இவரை பார்க்க குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். ..
வாசலில் வெளியூர் கூட்டம் அதிகாலையில் நிற்பதை பார்த்து இருக்கிறேன். .
புகழ்பெற்ற கைராசியான மருத்துவர். ...
சரி இவர் எழுதி கொடுத்த மருந்துகளோ மிக மலிவு விலையில் இருந்தன....
இவரை பார்பதற்கு முன்பு வேறு தோல் மருத்துவரை சந்திப்பதற்கே ஐநூறு ரூபாய் கொடுத்துள்ளார்கள். (அது தனி கதை )
மருத்துவமே வியாபாரமாகிப் போன இந்த காலத்தில் வெறும் முப்பது ரூபாயில் வைத்தியம் ஆச்சரியம் தானே! இது மனித நேயம் தானே!
அந்த பிரபல மருத்துவர். .....
டாக்டர் திரு. கோடீஸ்வரன் MD D.M அவர்கள் தான்!
வாழ்க டாக்டர்! வளர்க மனித நேயம்!
மதுரை..கீழமாரட் வீதி...பாலஸ் ரோடு சந்திப்பில்
பேமஸ் ஜிகர்தண்டா கடை அருகே உள்ளது கிளினிக்!
நன்றியுடன்!
சங்கர் பாண்டியன்!

No comments:

Post a Comment