Thursday 18 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பாரதியிடம் சொல்லாதீர்கள் பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று . . . பாவம் அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவான் . . 😢
ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய ஜீவாவிடம் சொல்லாதீர்கள் நாங்கள் வார்டு கவுன்சிலரைக் கூட எதிர்க்கத் துணியவில்லை என்று! பாவம் நிமித்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 😢
மனுநீதி சோழனிடம் சொல்லாதீர்கள் நாங்கள் நீதியற்று சாகிறோமென்று, பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் 😢
வேலுநாச்சியிடம் சொல்லாதீர்கள் எங்கள் பெண்கள் சித்திரவதை படுவதை, பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . . 😢
சின்னமலையிடம் சொல்லாதீர்கள் நாங்கள் வெளிநாட்டுக்காரனுக்கு இரவு பகலாக வேளை செய்கிறோமென்று, பாவம் சமரசமில்லாமல் வெள்ளையனை எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . 😢
ராச ராசனிடம் சொல்லாதீர்கள் நாங்கள் அரேபிய மன்னர்களுக்கு அடிமையாக வேளை பார்கிறோமென்று, பாவம் பெரிய கோயில் உச்சியிலிருந்து குதித்து மான்டுபோவான் . . 😢
கட்ட பொம்மனிடம் சொல்லாதீர்கள் நாங்கள்
வெளிநாட்டு கம்பெனிக்கு கப்பம் கட்டுகிறோமென்று, பாவம் மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . 😢
சேதுபதியிடம் சொல்லாதீர்கள் நாங்கள் கடலில் சுடுபட்டு சாகிறோமென்று, பாவம் நடுக் கடலில் குதித்து சாவான் . . 😢
வ.உ.சி யிடம் சொல்லாதீர்கள் நாங்கள் அடிமையாய் வாழ்கிறோமென்று, பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . . 😦
உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள் நாம் அடிமை வர்க்கமில்லை என்று, பாவம் அவர்கள் சுதந்திரமடையட்டும் . . . 
----------------------------------------

No comments:

Post a Comment