Tuesday 28 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

[23/02 12:39 pm] ‪+91 98650 26626‬: ஒரு சின்ன கதை:
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.
கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
பறவை இனம் பெருகியது.
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.
எதிரிகளுக்கு உணவானது.
மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.
பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).
எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.
அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.
பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.
நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.
நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல.
இதை தான் ஆங்கிலேயத்தில்
*survivaloffittest* என்று சொல்லுகிறோம்.
அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
[26/02 6:33 am] Baskar R (PRO): ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.
"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.
"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.
"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.
பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.
மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை.
நான் தான்.... 3 வது படிக்கும் போது இது நடந்தது..
சொல்லவேண்டாம் என்று தான் நினைத்தேன் இருந்தாலும் மனசு கேக்கலை....

No comments:

Post a Comment