Monday 13 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*படித்தேன் ருசியா இருந்த்தது தங்களுக்கும் பரிமாறுகிறேன் ருசித்து அனுபவியுங்களேன்*
______________________________________________
*🎉இது சாப்பாட்டு தத்துவம்🎉*
*🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊*
*🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊*
*🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊*
*🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊*
*🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊*
*🎊பொய்= நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை= வெண் பொங்கல் போல நிரந்தரமானது!!🎊*
*🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊*
*‪🎊‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊*
*‪🎊‎தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல......* *அனுபவிக்க*
*முடியாது!!🎊*
*‪🎊தன்னம்பிக்கைச்‬ சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊*
*🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது*
*தெரியாது...வெந்தபின் தான் தெரியும்...🎊*
*🎊 வெற்றி என்ற தோசையை தனியே உண்ண முடியாது...*
*நட்பு என்ற சட்னி வேண்டும்..!*

No comments:

Post a Comment