Thursday 12 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!
மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ...
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.
நன்றி திரு அறிவானந்தம்

No comments:

Post a Comment