Monday 16 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஆன்மீக சிந்தனைகள்.*
தவழ முயற்சிக்காதே... பறக்க கற்றுக் கொள்!
🌿 உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
🌿 எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.
🌿 உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்.
🌿 நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
🌿 கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
🌿 அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்திடுங்கள். அது தான் உண்மையான தலைமைப் பண்பு.
🌿 ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment