Wednesday 11 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு !
வீட்டில் ஏழ்மை ! தொடர்ந்து பல நாட்களாக பசி ! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு !
ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்தச் சிறுவன் !
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,
*”டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,”* என்றார்.
“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. *குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.*
*சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர்.* *சில்லரை கிடைக்குமென நினைத்தவனிடன் கையில் பணம்…*
*மகிழ்ந்தான்…*
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, *குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.*
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். *அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்.*
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். *வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.*
*வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.!*
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment