Monday 26 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அதென்ன சின்ன ஒரு காய்ச்சலு க்கு இந்த அதிமுக காரங்க இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம் பன்றாங்க ன்னு கேட்கிற எல்லா தோழர்களுக்கும்...
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். கருணாநிதி க்கு ஒன்றென்றால் அவரின் பிள்ளைகள் அவரை பார்த்துக்கொள்வார்கள். மற்ற கட்சித் தலைவர்களுக்கும் அதே தான். ஆனால் எங்கள் அம்மாவுக்கு..?? நீங்கள் எல்லாம் நினைப்பது போல வெறும் உதட்டளவில் நாங்கள் எங்கள் கட்சியின் தலைமையை அம்மா என்று அழைப்பதில்லை. அம்மா என நாங்கள் எங்கள் தலைமையை அழைப்பது இதயத்தில் வெகு இயல்பாக எழுகிற பாசத்தின் உச்சம். இது தான் நீங்கள் கேட்ட கேட்கப்போகிற மொத்த கேள்விகளின் அடிப்படை பதில்.
சரி. மண்சோறு கும்பல் தீச்சட்டி கும்பல் ன்னு விமர்சனம் வருகிறதே..? அதற்கு பதில் வெகு எளிதானது. இயல்பானதும் கூட.நாங்கள் உயிருக்கிணையாக மதிக்கும் எங்கள் அம்மாவை அருகில் இருந்து மருந்து மாத்திரை கொடுத்து பார்க்கும் வாய்ப்பில்லை. அனைத்து தொண்டர்களுக்கும் அதே கருத்து தான். ஆக, அப்படிப்பட்ட அம்மாவிற்கு எளிய தொண்டனாக நாங்கள் என்ன செய்ய முடியும்..?? வெகு எளிது, பிரார்த்தனை. அதை நான் செய்கிறோம். நாங்கள் விரும்பியதை நாங்கள் என் தலைமைக்காக செய்கிறோம். எங்களுக்கு என்ன முடியுமோ அதை பொறுத்து என் பிரார்த்தனையின் அளவீடு மாறும்.
இதில் குற்றம் சொல்லவே, கிண்டலடிக்கவோ என்ன இருக்கிறது. எங்கள் கட்சியில் அனைத்து தொண்டனுக்கும் அம்மாவிற்காக பிரார்த்தனை செய்வது அல்லது செய்பவர்களைக் கண்டால் அவ்வளவு பிடிக்கிறது. ஏன்..?? அம்மாவிற்காக பிரார்த்தனை செய்தால் அம்மாவின் நலம் மென்மேலும் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை.
ஆக, அம்மாவிற்காக பிரார்த்தனை செய்பவர்களைக்கண்டால் மண்சோறு கும்பல் தீச்சட்டி கும்பல் என விழிப்பவர்கள் யாராக இருக்க முடியும்..?? நிச்சயம் எங்கள் புரட்சித்தலைவியின் எதிரிகளாகத் தான் இருக்க முடியும். அல்லது கருணா கும்பலிடம் வாங்கி குடித்து காலத்தை ஓட்டும் கருணாவின் காலை நக்கிப்பிழைக்கும் கும்பலாக இருக்க முடியும்.....
-All AIADMK Members and Friends
நன்றி சிதம்பரம்

No comments:

Post a Comment