Tuesday 13 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்தியாவில் 
ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் !
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும், 
கடைசி 20 வருடங்கள் 
வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் 
Table, chair போல்
நாமும் ஒரு பழைய பொருளாகிவிடுவோம் !
மீதி இருப்பது
30 வருடங்கள் !
அதில் 10 வருடங்கள்
துங்கிவிடுகிறோம்,
மீதி 20 வருடங்கள்
அதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக
12 மணிநேரம் உழைக்கிறோம்,
அதில் 10 வருடங்கள் போய்விடும்!
மீதி 10 வருடங்கள்,
அதில் மனைவியோடு பிரச்சனை, குழந்தைகளோடு பிரச்சினை,
உடல்நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய்விடும்!
மீதி 8 வருடங்கள்!
அதாவது 2922 நாட்கள்! நமது மனதிருப்திக்காக வேண்டுமானால்
'round' டாக 3000 நாட்கள் என வைத்துக்கொள்ளலாம் நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள் வெறும் 3000 தான்!
இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம்
என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ வேண்டும்?!
அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை, காதல், இயற்கை, சந்தோஷம், உதவி, புன்னகை,
கனிவு, குழந்தை, பாராட்டு , விட்டுக்கொடுத்தல், பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை,
என எத்தனையோ
positive வான விஷயங்கள் இருக்கின்றன !!
இவற்றை பின்பற்றலாமே!!
நன்றி பாஸ்கர்

No comments:

Post a Comment