Monday 20 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"#அவரவர்கோணங்கள்!" (ஒரு சுவாரஸ்ய கதை)
-
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையான தவம் இருந்தான்.
கடவுளும் அவன் தவத்தை மெச்சி...,
"என்ன வரம் வேண்டும் பக்தா!" என்றார்.
மற்றவர்களின் மனதைப் படிக்கிற திறனை
எனக்கு அருளவேண்டும் சுவாமி...!"என்றான்.
கடவுளும் "அப்படியே வரம் தந்தேன்!" என்றார்.
சில நாட்களிலேயே, அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து, சுவாமி! தயவு செய்து தாங்கள் எனக்களித்த வரத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்!" என்றான்.
கடவுள் "ஏன்?" என்றார்.
"அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமைப் பிடித்தவன், அடுத்தவர் குடி கெடுப்பவன், சோம்பேறி! என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை." என்றான்.
"அப்படியா..? இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக்கொள்! என்ன நடக்கிறது என்று கவனி!" என்றார் கடவுள்.
அப்படியே செய்தான் பக்தன்.
அப்போது ஒரு குடிகாரன் வந்தான்.
"யார்றா இவன்? நினைவே இல்லாம படுத்திருக்கான்! சரியான குடிகாரப் பயல்!" என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு திருடன் வந்தான்.
"ராத்திரி பூரா கொள்ளை அடிச்சிட்டு வந்து எவனோ படுத்துக் கிடக்கான்!" என்று சொல்லிச் சென்றான்.
ஒரு நோயாளி வந்தான்.
"பாவம்! வயிற்று வலி போல, அதான் சுருண்டு கெடக்கான்." என்று சொல்லிப் போனான்.
ஒரு துறவி வந்தார்.
"யாரோ முற்றும் துறந்தவர் போல...., அனைத்தையும் மறந்து உறங்குகிறார் என்று சொல்லிவிட்டு போனார்.
சிறிது நேரம் கழித்து கடவுள் பக்தனிடம் வந்தார்.
"பார்த்தாயா..! உன்னைப் பற்றி அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது, உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தைப் பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும், ஒரு புரிதல் இருக்கும்!
#உன்னுடையசரியானபாதையில்தைரியமாகச்செல்!" என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்!
நாமும் தெளிவடைவோம்!
"எல்லாம் அவன் செயல்!!"
நன்றி காவேரி சிதம்பரம்

No comments:

Post a Comment