Monday 10 April 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மிகப்பிரம்மாண்டமாக திட்டமிடுங்கள்! உங்களைச் செயல்படுத்த 60லட்சம்கோடி உயிரணுக்கள் உங்கள் உடலிலேயே உள்ளன*
ஒரு தனி உயிரணுவிலிருந்து செழிப்படைந்து தாயின் கருவிலிருந்து 9மாத காலத்தில் 2லட்சம்கோடி உயிரணுக்களுடன் ஒரு குழந்தை பிறக்கிறது
அது 60லட்சம் கோடி உயிரணுக்கள் கொண்ட மனிதராக வளருகிறது
என்றாலும்,
உயிரணுக்கள் நீண்டகாலம் உயிருடன் இருப்பது இல்லை
அவை தேய்ந்து சேதமடைந்து உருமாறி அழிந்துபோய் கழிவுப் பொருளாக வெளிவருகிறது..
ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், பழக்கவழக்கங்கள்
கடைபிடித்து வந்தால் புதிய உயிரணுக்கள் உற்பத்தி ஆகின்றன..
ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை, உணர்வுநிலை இவை சீர்கெட்டால் புதிய உயிரணுக்கள் உருவாவது பாதிக்கப்படும்..
பழைய உயிரணுக்களுக்கு பதிலாக புதியவை உற்பத்தியாகாவிட்டால் மரணம் ஏற்படும்.
பழைய உயிரணுக்களுக்கு பதிலாக புதிய உயிரணுக்கள் பத்து லட்சக் கணக்கில் உருவாகாவிட்டால் அதன் விளைவு படுமோசமாக இருக்கும்
இதையே திருப்பி போடுங்கள்
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், உடல்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை இருந்தால் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கில் உயிரணுக்கள் உற்பத்தி ஆகும்... .
*நாம் நம்மையே ஒரு புதிய லட்சிய மனிதராக காணலாம்*
இந்த உடலானது வாழ்க்கைக்கு தேவையான காரியங்களை செய்வதற்கு 60லட்சம் கோடி உயிரணுக்களுக்கு சக்தி தேவை.
இந்த சக்தியை உடலே தனது இயக்கத்தின் வாயிலாக உற்பத்தி செய்கிறது
"அடினோ சைன் ட்ரை பாஸ்பேட்" என்கிற பொருளானது உடைந்து சிதறும்போது சக்தி உண்டாகிறது.
அந்த சக்தியை கொண்டுதான் உயிரணுக்கள் செயல்படுகின்றன. உடலை செயல்பட வைக்கின்றன. உயிரணுக்களை இயக்குவது, செயல்பட வைப்பது சில ரசாயனங்கள்
இந்த உடலின் செயல்பாடு என்பது ஒரு ரசாயன சாஸ்திரத்தின் அடிப்படையில் நடக்கிறது. இதை அறிந்து கொள்வது மிகவும் சிரமம்..
எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும் 60லட்சம்கோடி உயிரணுக்களை கொண்ட உடலானது மனத்தின் கட்டளைக்கு பணிந்து சேவை செய்யும் சேவகன் போன்றது
அனைத்திற்கும் வழிகாட்டுவது நம் மனமே
உடல் என்பது உங்கள் மனத்தின் விரிவாக்கம்.
மனம் என்ன கூறுகிறதோ அதை செய்வதே உடலின் பணி..
ஆக உங்கள் கட்டுப்பாட்டின்கீழ், உங்கள் ஆணையை ஏற்று நடக்க 60லட்சம் கோடி உயிரணுக்கள் உள்ளன.
இவ்வளவு சக்தி உங்களிடம் இருக்கிறதே இது எதற்கு? தோற்றுப்போகவா?
அளவற்ற சக்தி கொண்ட உங்கள் மனம் என்ன முட்டாளா?
உங்களிடம் பெரும் சக்தியை மனம் கொடுத்திருக்கிறதே அது தோற்றுப்போவதற்கா?
எல்லையற்ற தன்மை, அதாவது பரம்பொருள் என்பது முட்டாள்தனமானது அல்ல.
எல்லையற்ற உலகம் என்பது எவ்வளவு சுத்தமாக பிழையின்றி அணு அளவு கூட பிசகின்றி இயங்குகின்றது பார்த்தீர்களா?
வர்ணிக்க முடியாத சூட்சுமத்துடன் காலம் தவறாமல் இந்த எல்லையற்ற உலகம் இயங்குவதை கண்டீர்களா?
இந்த எல்லையற்ற தன்மைக்கு உருவம் கிடையாது. திசை கிடையாது, முதலும் முடிவும் கிடையாது.
இவ்வளவும் இயங்குகிறது என்றால் அதை இயக்கும் சக்தி முட்டாள்தனமாகுமா?
நீங்கள் தோல்வி அடைய தேவையில்லை!
நீங்கள் தோல்வி அடையக்கூடாது!!
நீங்கள் தோல்வி அடையவும் முடியாது!!!
எனவே,
*மிகப் பிரம்மாண்டமாக திட்டமிடுங்கள்.. உங்களுக்காக இயங்க 60லட்சம் கோடி உயிரணுக்கள் உள்ளன*

No comments:

Post a Comment