Friday 16 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎯 வழி காட்டுதல் 🎯
🎯 பிறப்பு இறப்புக்கு வழி காட்டுகிறது
இறப்பு மனப் போராட்டத்திற்கு வழி காட்டுகிறது
போராட்ட்டம் மன உளைச்சலுக்கு வலி காட்டுகிறது
மன உளைச்சல் வறுமைக்கு வழி காட்டுகிறது,
வறுமை சிலருக்கு அமைதிக்கு வழி காட்டுகிறது
வேறு சிலருக்கோ தவறிழைக்க வழி காட்டுகிறது
அமைதி ஆன்ம உணர்வுக்கு வழி காட்டுகிறது
தவறோ செல்வத்தை சேமிக்க வழி காட்டுகிறது
செல்வ சேகரிப்பு அகம்பாவத்திற்கு வழி காட்டுகிறது
அகம்பாவம் மீண்டும் போருக்கு வழி காட்டுகிறது,
அந்த போர் வறுமைக்கு வழி காட்டுகிறது,
இப்படிதான் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருகிறது
வாழ்க்கை என்பது இன்ப துன்ப சக்கரம்
மேலது கீழாம்
கீழது மேலாம்
எதுவும் நிரந்தரமாக நிலைக்கப் போவதில்லை
எல்லாவற்றையும் ஆழ்ந்து அனுபவிக்க கற்றுக் கொண்டால் வாழ்வது ஒன்றும் பாரமில்லை
இறப்பதற்காக பிறந்து விட்டோம்
இறப்பதற்கு முன் வாழந்து களிந்திடுவோம் 🎯
🎯 வாழ்வின் வட்டத்தில் : யாதுமாகி 🎯
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment